காவல்துறையில் சிக்கிய நாக சைதன்யா, என்ன செய்தார் தெரியுமா?

காவல்துறையில் சிக்கிய நாக சைதன்யா, என்ன செய்தார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா காவல்துறையில் சிக்கிய நிலையில் அவர் அபராதம் கட்டியதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனைத்து வாகனங்களிலும் கருப்பு நிற கலர் பிலிம் ஓட்டக்கூடாது என்றும் கருப்பு பிலிம் ஒட்டுவதால காரின் உள்ளே நடக்கும் குற்றங்கள் வெளியே தெரியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சில நடிகர்களின் கார்களில் கருப்பு நிற பிலிம் ஒட்டப்பட்டு இருந்ததை அடுத்து அவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர் என செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யாவின் காரிலும் கருப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்ததையடுத்து பெங்களூர் போலீசார் அவருடைய காருக்கு அபராதம் விதித்தனர். இதனை அடுத்து நடிகர் நாகசைதன்யா ரூ.700 அபராதம் கட்டியதை அடுத்து அவருடைய காரில் இருந்த கருப்பு பிலிம் போலீசாரால் நீக்கப்பட்டது .

ஏற்கனவே அல்லுஅர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர் உள்பட ஒருசில தெலுங்கு திரையுலக பிரபலங்களும் இதே காரணத்திற்காக காவல்துறையினர்களிடம் அபராதம் செலுத்திய நிலையில் தற்போது நாகசைதன்யாவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES