கடற்கரையில் காருக்குள் காதலனுடன் கிலி கிலி – கையும் களவுமாக சிக்கிய பிரபல தொகுப்பாளினி..!

கடற்கரையில் காருக்குள் காதலனுடன் கிலி கிலி – கையும் களவுமாக சிக்கிய பிரபல தொகுப்பாளினி..!

முன்பெல்லாம் சினிமா நடிகர், நடிகைகளை பற்றித்தான் விவாகரத்து, கிசுகிசு செய்தியெல்லாம் வலம் வரும். ஆனால், இப்போது, சின்னத்திரை நட்சத்திரங்கள் சினிமா நட்சத்திரங்களை ஓவர் டேக் செய்து கொண்டிருகிறார்கள்.

 

 

இணையத்தில் கவர்ச்சி காட்டுவதில் ஆரம்பித்து, விவாகரத்து, கள்ளக்காதல் என விஷயங்கள் சூடு பறக்கிறது. இந்நிலையில், திருமணமாகி விவாகரத்தான தொகுப்பாளினி ஒருவர் காதலனுடன் கடற்கரை அருகே காருக்குள் அப்படி இப்படி இருந்த புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி வருகின்றது.

பிரபல மியூசிக் சேனல் ஒன்றில் பணியாற்றி வந்த இந்த தொகுப்பாளினி திருமணத்திற்கு பிறகு தொகுப்பாளினி வேலைக்கு முழுக்கு போட்டார். கணவருடன் ஆறு ஆண்டுகள் ஒற்றுமையாக இருந்த அவர் சமீபத்தில் தான் அவரை விவாகரத்து செய்தார்.

இருவருக்குள்ளும் இனிமேலும் திருமண உறவு நீடிப்பது இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இருவரின் எதிர்காலமும் பாதிக்கப்படும்.எனவே, ஒருவரை ஒருவர் பிரிகிறோம் என எளிமையாக தன்னுடைய விவாகரத்து தகவலை பதிவு செய்தார் அம்மணி.

கணவர் பெரிய இடத்து பிள்ளை என்றாலும் சமத்து பிள்ளை. தொகுப்பாளினியின் கூடாத பழக்கம் தான் இந்த விவாகரத்திற்கு காரணமாக இருக்கும் என அப்போதே பேசப்பட்டது.

அதே சமயம், மூக்கு முட்ட குடித்து விட்டு தனது ஆண் நண்பருடன் காரில் வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தி பொது இடத்தில் கையும் களவுமாக சிக்கினார் தொகுப்பாளினி.

ஆனால், காரை நான் தான் ஓட்டி வந்தேன் என அப்ரூவர் ஆகி தொகுப்பாளினியை காப்பாற்றினார் அந்த ஆண் நண்பர்.

நிலைமை இப்படி இருக்க, அவருடன் அடிக்கடி ஊர் சுற்றி வந்த தொகுப்பாளினி தற்போது கடற்கரை ஓரம் உள்ள ஒரு சாலையில் அவருடன் காருக்குள் அப்படி இப்படி இருக்கும் போது எடுத்துக்கொண்ட கோக்கு மாக்கான செல்ஃபி புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

இதனை அறிந்த ரசிகர்கள், இப்படி இருந்தா விவாகரத்து பண்ணாம.. கோயில் கட்டியா கும்பிடுவாங்க என்று நக்கல் கருத்துகளை வெளியிட்டு வரு(க்)கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES