படம் தோல்வி அடைந்ததால் ரூ.50 கோடியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்த நடிகர்!

படம் தோல்வி அடைந்ததால் ரூ.50 கோடியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்த நடிகர்!

பொதுவாக பெரிய நடிகரின் படங்கள் தோல்வி அடைந்தால் அந்த தயாரிப்பாளரை சமாதானப்படுத்துவதற்காக இன்னொரு திரைப்படம் நடித்துக் கொடுப்பதாக தான் நடிகர்கள் கூறுவார்களே தவிர வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்ததாக இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அடுத்து தான் வாங்கிய சம்பளத்தில் 50 கோடி ரூபாயை பிரபல நடிகர் ஒருவர் திருப்பிக் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ராதேஷ்யாம் திரைப்படம் சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும், இந்த படம் மிகவும் மெதுவாக நகர்ந்ததால் ரசிகர்களை கவரவில்லை. இதனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை வசூல் அளவில் சந்தித்ததாக கூறப்பட்டது .

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு 100 கோடிக்கு மேல் நஷ்டம் என்று செய்திகள் வெளியான இந்த படத்திற்காக வாங்கிய 100 கோடி ரூபாய் சம்பளத்தில் 50 கோடி ரூபாயை தயாரிப்பாளரிடம் நடிகர் பிரபாஸ் திருப்பி கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES