திடீரென முத்தம் கொடுத்த அமீர்: பாவனியின் ரியாக்சன் இவ்வளவுதானா?

திடீரென முத்தம் கொடுத்த அமீர்: பாவனியின் ரியாக்சன் இவ்வளவுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பாவனிக்கு திடீரென அமீர் முத்தம் கொடுத்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக அபினய் மற்றும் பாவனி இடையே காதல் இருந்ததாக ராஜூ உள்பட ஒரு சிலர் கூறியது பெரும் பிரச்சனைக்கு உள்ளானது என்பதும் பாவனி மிகவும் ஆத்திரத்துடன் இது குறித்து பேசியதை அடுத்து கமல்ஹாசன் இந்த விவகாரத்தை ஒரு வழியாக முடித்து வைத்தார் என்பதும் தெரிந்ததே.

 

இந்த நிலையில் அபினய் - பாவனி காதல் விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது அமீர் மற்றும் பாவனி காதல் விவகாரம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அமீர் நேரடியாகவே தனது காதலை பாவனியிடம் சொல்லி விட்டாலும் இன்னும் அந்த காதலை பாவனி ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதே அவரது உரையாடல்களிலிருந்து தெரியவருகிறது.

இந்த நிலையில் ‘உன்னிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும்’ என பாவனி அருகில் வந்த அமீர், திடீரென அவருக்கு முத்தம் கொடுத்தது பெரும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அமீர் தனக்கு முத்தம் கொடுத்தது குறித்து தனது அதிருப்தியை மட்டுமே பாவனி வெளிப்படுத்தினார் என்பது அவர் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அமீரின் கன்னத்தில் பாவனி பளார் என அறைந்து இருக்க வேண்டும் என்றும் அவருக்கு சரியான பாடம் புகட்டியிருக்க வேண்டுமென்றும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் என்று கமல்ஹாசன் முன்னிலையில் பேசப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES