இரண்டு பிரபல நடிகைகளுக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

இரண்டு பிரபல நடிகைகளுக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

 

 

இரண்டு பிரபல நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகிய இருவரும் நெருக்கமான தோழிகள் என்பதும் இருவரும் மும்பையில் நடந்த பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருக்க்கும் நிலையில் இருவரும் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES