முதலிடத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் சிபி: பாவனியால் மீண்டும் ஒரு பிரச்சனை!

முதலிடத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் சிபி: பாவனியால் மீண்டும் ஒரு பிரச்சனை!

பாவனி விஷயம் குறித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என சிபியிடம் சஞ்சீவ் வாக்குவாதம் செய்ய முதலிடத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் சிபி மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன. .

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்கள் 11 பேரும் தரவரிசை பட்டியலின்படி நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஒருசில இடங்களில் சில போட்டியாளர்கள் தக்க வைத்துக் கொண்டனர் என்பதையும் முதலிடத்தை சிபி பிடித்துக் கொண்டு நகர மாட்டேன் என்கிறார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் முதலிடத்தை குறிவைத்து நிரூப், அமீர் உள்பட ஒருசில போட்டியாளர்கள் சிபியிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர். நீங்கள் சேஃப் கேம் விளையாடுகிறீர்கள், அதனால் நீங்கள் முதலிடத்துக்கு தகுதி இல்லை என்று அமீர் வாக்குவாதம் செய்ய அவரிடம் பதிலுக்கு சிபி வாக்குவாதம் செய்கிறார்.

நீங்கள் உங்களுடைய இடத்தை மட்டும் தான் பேச வேண்டும், பாவனி இடம் பற்றி பேசி இருக்கக் கூடாது, அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சஞ்சீவி கூற மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று சிபி கூறுகிறார். இதனால் வாக்குவாதம் நீண்டுகொண்டே போகிறது என்பது குறிப்பிடதக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES