வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியாமணி

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியாமணி

தென்னிந்திய நடிகையாக வலம் வரும் பிரியாமணி தன்னைப் பற்றி வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பருத்திவீரன் படம் மூலம் பல விருதுகளை அள்ளிக்குவித்த நடிகை பிரியாமணி, தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தெலுங்கில் இரண்டு படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும் அட்லீ இயக்கும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்து வருகிறார்.

 

பிரியாமணி

கணவருடன் பிரியாமணி

 

இதற்கிடையில் பிரியாமணி தனது கணவர் முஸ்தப்பா ராஜூவை பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தீபாவளி தினத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரியாமணி தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான செய்திகளுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES