மீண்டும் சீரியலில் நடிக்கவந்த நடிகர் ஆனந்த் பாபு- எந்த தொடர், தொலைக்காட்சி பாருங்க
தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு காமெடி நடிகர் நாகேஷ்.
எல்லோரையும் சிரிக்க வைத்த இவருக்கு இதுவரை சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது பலரின் வருத்தமாகவே உள்ளது.
நாகேஷ் அவர்களின் மகன் ஆனந்த் பாபு நிறைய படங்கள் நடித்துள்ளார், கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய்யில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
தற்போது என்ன தகவல் என்றால் விஜய்யில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
முத்தழகு என்ற பெயரில் புதிய சீரியல் உருவாகிறதாம், அதில் முக்கிய வேடத்தில் அவர் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம்.