விவாகரத்து குறித்து சமந்தாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

விவாகரத்து குறித்து சமந்தாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சமந்தா இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது: ’நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இருவரும் கணவன் மனைவியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். ஒரு சில ஆண்டுகள் நாங்கள் நல்ல நட்பை பெற்றிருந்தோம். எங்கள் உறவின் முக்கியமான அம்சமாக இருந்தது. எங்கள் இருவருக்கும் இடையே ஒரு சிறப்பான பிணைப்பை எப்போதும் வைத்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும். நலன்விரும்பிகள், ஊடகங்கள் எங்கள் தனிப்பட்ட விவகாரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்’ என்று சமந்தா கூறியுள்ளார்.

இதனை அடுத்து கடந்த சில நாட்களாக சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிய போவதாக வெளிவந்து கொண்டிருந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES