விடிய விடிய போதைப்பொருள் விருந்து… 4 நடிகை, ஒரு பிக்பாஸ் போட்டியாளர் கைதான தகவல்!

விடிய விடிய போதைப்பொருள் விருந்து… 4 நடிகை, ஒரு பிக்பாஸ் போட்டியாளர் கைதான தகவல்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 4 பேர் தென்னிந்திய நடிகைகள் என்றும் ஒருவர் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மும்பை-ஆக்ரா நெடுங்சாலையில் உள்ள இகத்புரி பகுதியில் இருக்கும் 2 சொகுசு பங்களாக்களில் போதைப்பொருள் விருந்து நடப்பதாகப் போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து நேற்று அதிகாலை 2 மணிக்கு சோதனை நடத்தப் பட்டதாகவும் அந்த சோதனையில் 22 பேர் கைது செய்யப் பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்கை தாஜ் மற்றும் ஸ்கை லாகூன் என அழைக்கப்படும் இந்த சொகுசு பங்களாக்களில் தடைச் செய்யப்பட்ட “ஹீக்கா“ எனும் போதைப்பொருள் பயன்படுத்தப் பட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள் 10 பேர் ஆண்கள் என்றும் இவர்களில் 4 பேர் தென்னிந்திய நடிகைகள் மற்றும் ஒரு பிக்பாஸ் போட்டியாளர் உள்ளார் என்றும் தகவல் கூறப்படுகின்றன. இதில் மராத்திய பிக்பாஸ் போட்டியாளர் ஹீனாவும் கைது செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஹீனாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் மற்றவர்களின் பெயர்களை ரகசியமாகவே வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES