சகோதரி கணவருடன் கள்ளத்தொடர்பு: ஷில்பா ஷெட்டி கணவர் கூறிய அதிர்ச்சி தகவல்!
தனது சகோதரியின் கணவருடன் தனது முன்னாள் மனைவி கள்ளத்தொடர்பு இருந்ததால்தான் அதிர்ச்சி அடைந்து அவரை விவாகரத்து செய்ததாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கும் கவிதா என்பவருக்கும் முதலில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ராஜ்குந்த்ரா மற்றும் கவிதா லண்டனில் வசித்து கொண்டு இருந்தபோது ராஜ் குந்த்ராவின் சகோதரி ரீனா என்பவரின் கணவருடன் கவிதா கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குந்த்ரா கவிதாவை விவாகரத்து செய்தார். இதன் பின்னர் அவர் ஷில்பா ஷெட்டியை சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் கவிதா வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியபோது தானும் ராஜ் குந்த்ராவும் பிரிவதற்கு ஷில்பாஷெட்டி தான் காரணம் என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் ராஜ்குந்த்ரா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். நானும் கவிதாவும் பிரிய ஷில்பா காரணம் இல்லை என்றும் கவிதா என்னுடைய சகோதரியின் கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் தான் அவரை பிரிந்தேன் என்றும் கூறினார்
இதுகுறித்து ஷில்பா ஷெட்டி கூறுகையில் ’நான் ராஜ்குந்த்ராவை முதன் முதலில் பார்க்கும் போது அவருக்கு விவாகரத்து ஆகி நான்கு மாதங்கள் ஆகியிருந்தது என்றும், ராஜ்குந்த்ரா-கவிதா பிரிவுக்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்