பாவம் கணேசன் சீரியலில் திடீரென நடந்த நாயகி மாற்றம்- அட இவரா இனி
விஜய் தொலைக்காட்சியில் நிறைய புதுபுது சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படி இந்த தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் வைத்து ஒரு புதிய சீரியல் வந்தது.
பாவம் கணேசன் என்று பெயரிடப்பட்ட இந்த சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் வரவேற்பு பெற ஆரம்பித்துள்ளது. சில பார்த்த முகங்கள் இருந்தாலும் ஒருசில புதுமுக நடிகர்கள் உள்ளார்கள்.
இந்த சீரியலுக்கான நேர மாற்றங்கள் நிறைய நடந்து வருகிறது, இந்த சீரியல் ரசிகர்கள் தயவுசெய்து அடிக்கடி நேரம் மாற்றாதீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சீரியலில் யமுனா என்ற வேடத்தில் நடிப்பவரின் நாயகி மாற்றம் நடந்துள்ளது. அவருக்கு பதிலாக இனி ஷிவன்யா தான் நடிக்க உள்ளாராம்.