நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் ஏற்படும் பரபரப்பான விஷயம் - ரசிகர்களும் காத்திருக்கும் அதிர்ச்சி

நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் ஏற்படும் பரபரப்பான விஷயம் - ரசிகர்களும் காத்திருக்கும் அதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் பெரிதும் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இதில் கதாநாயகனாக, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை உள்ளிட்ட சீரியலில் நடித்துள்ளார்.

மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

பல திருப்புமுனையை கொண்ட ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில், தற்போது யாரும் எதிர்பாராத விஷயம் நடந்துள்ளது.

ஆம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தற்போது முத்துராசு எனும் வில்லன் கதாபாத்திரம் வலுவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் முத்துராசு இறந்துவிடுவது போல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளதாம். இந்த தகவல் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES