மீண்டும் ரோஜா சீரியலில் நடிக்க வரும் பிரபல நடிகை- வரவேற்கும் ரசிகர்கள்
தமிழ்நாட்டிலேயே டாப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. TRPயில் கடந்த சில மாதங்களாகவே முதல் இடத்தை பிடித்து வருகிறது.
முதல் இடத்தில் இருந்து இறங்கி விடக்கூடாது என்பதில் சீரியல் குழுவினர் மிகுந்த அக்கறையில் உள்ளனர்.
அடுத்தடுத்து கதைக்களத்தில் விறுவிறுப்பான காட்சிகளை வைத்து மக்களை சீரியல் பார்க்க ஆர்வத்தை தூணடி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக அனைவரும் எதிர்ப்பார்த்த நீதிமன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின.
தற்போது சீரியல் குறித்து ஒரு சின்ன செய்தி.
இதற்கு முன் சீரியலில் நடித்துவந்த ஐஸ்வர்யா என்ற நடிகை மீண்டும் நடிக்க வருகிறாராம்.
இந்த தகவல் அறிந்ததும் ரசிகர்கள் இனி கதையில் மேலும் விறுவிறுப்பு அதிகமாக போகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.