‘போக்கிரி’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ‘கே.ஜி.எப்’ நடிகர் யாஷ்?

‘போக்கிரி’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ‘கே.ஜி.எப்’ நடிகர் யாஷ்?

கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான நடிகர் யாஷ், அடுத்ததாக ‘போக்கிரி’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் யாஷ். கன்னட படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய  மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தை வருகிற ஜூலை 16-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

யாஷ், பூரி ஜெகன்நாத்

இந்நிலையில், நடிகர் யாஷ், அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கில் மகேஷ் பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன் போன்ற படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத், யாஷின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் தற்போது விஜய் தேவரகொண்டாவின் ‘லிகர்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்தபின் அவர் யாஷ் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES