ஊரடங்கின்போது காதலருடன் காரில் சுற்றிய நடிகை மீது வழக்குப்பதிவு!

ஊரடங்கின்போது காதலருடன் காரில் சுற்றிய நடிகை மீது வழக்குப்பதிவு!

ஊரடங்கின்போது காதலனுடன் காரில் சுற்றிய நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி, சமீபத்தில் வெளியான சல்மான் கானின் ’ராதே’ படம் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் திஷா பதானி தனது காதலருடன் இரவு நேரத்தில் காரில் சுற்றியுள்ளதாக தெரிகிறது. அப்போது போலீசார் அவர்கள் சென்ற காரை வழிமறித்து விசாரித்தபோது சரியான காரணத்தைக் கூறவில்லை. இதனை அடுத்து ஊரடங்கு விதிகளை மீறியதாக திஷா பதானி மற்றும் அவரது காதலர் டைகர் ஷெராப் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News