வக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்

வக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்

சூர்யாவின் 39-வது படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவர் தற்போது கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. சூர்யா இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES