மீண்டும் தள்ளி போகும் ரன்பீர் கபூர், அலீயா பட் திருமணம்! என்ன காரணம் தெரியுமா?

மீண்டும் தள்ளி போகும் ரன்பீர் கபூர், அலீயா பட் திருமணம்! என்ன காரணம் தெரியுமா?

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் நடிகர் ரன்பீர் கபூர், இவரும் பிரபல நடிகையான தீபிகா படுகோணும் காதலித்து வந்தனர்.

 பின்னர் இந்த ஜோடி சில காரணங்களால் பிரிந்தனர், மேலும் தீபிகா படுகோண் கலந்து கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர் குறித்து சர்ச்சையான பதிலை அளித்தார்.

அது அப்போது மிக பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது, இதனிடையே தற்போது தீபிகா படுகோண் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரன்பீர் கபூர், அலீயா பட் இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் 2020-ல் திருமணம் செய்வதாக இருந்த போது ரிஷி கபூர் இறந்ததால் திருமணம் தள்ளிப் போனது.

  மேலும் இந்த வருடம் திருமணத்தை நடத்த இருந்த நிலையில் இருவருக்குமே கோவிட் பாஸிடிவ். அதிலிருந்து மீண்டு வந்த இவர்கள் திருமணம் செய்கிற சூழல் இதுவல்ல என்று மறுபடியும் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES