ராஜா ராணி சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகை - அட, இவரா - ரசிகர்களுக்கு சப்ரைஸ்

ராஜா ராணி சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகை - அட, இவரா - ரசிகர்களுக்கு சப்ரைஸ்

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியடைந்த சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.

இந்த முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சில மாதங்களுக்கு முன் துவங்கியது.

இதில் ஆல்யா மானசா மற்றும் சித்து நடித்து வருகின்றனர். மிகவும் விறுவிறுப்பாக தற்போது ராஜா ராணி 2 சென்று கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கதாநாயகி தனது மாமியாருடன், ஊர் விஷேஷத்திற்கு செல்லுகிறார்.

அங்கே அனைவரையும் மிரட்டி எடுக்கும் கதாபாத்திரமாக நடிகையும் டப்பிங் ஆர்டிஸ்ட் கலைஞருமான ஸ்ரீலேகா ராஜேந்திரன் நடிக்கிறார்.

இவர் இதற்கு முன் வாணி ராணி, அன்பே வா, கோலங்கள், உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES