பிக்பாஸ் சொன்ன ஒரு விஷயம், கண்ணீர் விட்டு அழும் போட்டியாளர்கள்... பிக்பாஸ் 10, 3து புரொமோ இதோ
பிக்பாஸ் 10
105 நாட்கள் மக்களை என்டர்டெயின்மென்ட் செய்யும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ்.
10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி படு பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது, மக்கள் ஏற்கெனவே சீரியல்களில், படங்களில், ரியாலிட்டி ஷோக்களில் பார்த்து ரசித்த பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதேபோல் மக்களுக்கு அறிமுகம் இல்லாத சிலரும் கலந்துகொண்டுள்ளனர், அதிரடி சரவெடியாக முதல் நாள் நிகழ்ச்சி இருந்த நிலையில் கடந்த 2 நாட்களும் பிக்பாஸ் பரபரப்பாக தான் செல்கிறது.

புரொமோ
இன்று பிக்பாஸ் 10வது சீசனின் 3வது புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் பிக்பாஸ் சொன்ன ஒரு விஷயத்தை கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு அழுகிறார்கள்.

அது என்ன விஷயம் என்றால், பிளாக் பாண்டியின் உடல்நிலை சரியில்லையாம், மருத்துவர் ஆலோசனைப்படி அவரை இந்த வீட்டைவிட்டு வெளியே அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என கூற அனைவரும் கண்ணீர்விட்டு அழுகிறார்கள்.
இதோ புரொமோ,