சக்சஸ் ஆன முத்து பிளான், சிக்கிய சிந்தாமணி, ஆனால்?... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சக்சஸ் ஆன முத்து பிளான், சிக்கிய சிந்தாமணி, ஆனால்?... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை

ஒரே ஒரு வீடு அதற்குள் நடக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளை மையப்படுத்திய கதையாக சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

அண்ணாமலை கஷ்டப்பட்டு கட்டிய வீட்டின் தனது மகன்கள், மருமகள்கள் என கூட்டுக் குடும்பமாக வாழ நினைத்தார், ஆனால் பண பேராவை கொண்ட அவரது மனைவி விஜயாவால் ஏகப்பட்ட பிரச்சனையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

இப்போது மனோஜிற்காக வீட்டை அடமானம் வைத்த விஜயாவால் எல்லோருமே அவதிப்பட்டு வருகிறார்கள். ஸ்ருதி அவரது அம்மா வீட்டில் இருக்க மனோஜ் ஷோரூமில் தங்க அண்ணாமலை, விஜயா, முத்து எல்லோரும் மீனா அம்மா வீட்டில் இருக்கிறார்கள்.

எபிசோட்

இன்றைய எபிசோடில், விஜயா மனோஜ் ஷோரூமிற்கு சென்று ரோஹினி வந்தாலா என்ன நடந்தது என விசாரிக்கிறார். அப்போது ரோஹினி கடைக்கு வந்ததும், மனோஜ் பேசிக்கொண்டு இருப்பதும் விஜயாவிற்கு தெரியவர செம கோபப்படுகிறார்.

அவளால் தான் நமக்கு இந்த நிலைமை, உனக்கும் அவளுக்கும் விவாகரத்து நடந்தே ஆக வேண்டும் என்கிறார்.

அடுத்து முத்து-மீனா இருவரும் வருமான வரித்துறை அரிகாரியுடன் பைனான்சியர் அலுவலகம் செல்கிறார்கள். அங்கு பைனான்சியர் பணம் கொடுக்கவில்லை, சிந்தாமணி தான் விஜயாவிற்கு மறைமுகமாக பணம் கொடுத்திருக்கிறார் என்கிறார்.

அதைக்கேட்டு முத்து-மீனா செம ஷாக் ஆகிறார்கள். பின் சிந்தாமணியிடம் முத்து-மீனா வந்து கேட்டதை பைனான்சியர் கூற அவரோ நான் எந்த தவறும் செய்யவில்லை, கணக்கு எல்லாம் சரியாக வைத்துள்ளேன், பணம் தந்தால் வீட்டுப் பத்திரம் தருவேன் என்கிறார்.

இப்போது வீட்டுப் பத்திரத்தை சிந்தாமணியிடம் இருந்து முத்து-மீனா எப்படி மீட்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES