ராஜமௌலி இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா! இந்திய சினிமாவில் மெகா 'ரீ-என்ட்ரி'!
டான் மற்றும் கிரிஷ் போன்ற தனது பிளாக்பஸ்டர் படங்களின் அடுத்த பாகங்களில் மீண்டும் நடிக்க வாய்ப்பிருப்பதாக பிரியங்கா சோப்ரா சூசகமாக தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலியின் வாரணாசி படம் மூலம் இந்திய சினிமாவில் மீண்டும் நுழைகிறார்.

பல வருடங்களாக சர்வதேசப் படங்களில் கவனம் செலுத்திய பிரியங்கா, தற்போது இந்தியப் படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். ராஜமௌலி, மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் வாரணாசி படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார்.
ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படப்பிடிப்பு முறைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்து பிரியங்கா பேசினார். ஒவ்வொரு இயக்குநரின் கதை சொல்லும் முறைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதாக அவர் கூறினார்.
டான், கிரிஷ் படங்களின் அடுத்த பாகங்கள் குறித்து கேட்டபோது, சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கலாம் என சூசகமாக பதிலளித்தார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.