தனுஷுடன் திருமண வதந்தி...நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்!
சமீப காலமாக இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி வரும் புதிய விடயம் என்றால் அது நடிகர் தனுஷ் மற்றும் மிருணால் தாகூர் திருமணம் பற்றிய வதந்தி தான்.
நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் காதலர் தினத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் தவல்கள் வெளியாகி புயலை கிளப்பியிருந்தது அனைவரும் அறிந்தது தான்.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை மிருணாள் தாகூர் புரொமோஷன் நிகழ்ச்சியில், தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
ஹிந்தியில் பல சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் துல்கர் சலமான் நடிப்பில் தமிழ்,தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். எந்த திரைப்படமும் அவருக்கு பெற்றுதராத வரவேற்பை சீதா ராமம் பெற்று தந்தது.
சீதா ராமம் படத்திற்கு பிறகு மிருணாள் தாகூர் பான் இந்தியா ரசிகர்களை பெற்றார். அதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'பேமிலி ஸ்டார்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

அவர் நடிப்பில் வெளியான ’ஹாய் நானா’ திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
தற்போது மிருணாள் தாகூர் சித்தாந்த் சதுர்வேதிக்கு ஜோடியாக தோ தீவானே ஷெஹர் மெய்ன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் பிப்ரவரி 20 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனால் புரொமோஷன் வேலைகள்தீவிரமான நடைபெற்றுவருகின்றது.
இந்த திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், தனுஷ்-மிருணாள் தாகூர் காதலிக்கிறார்கள் என கூறப்பட்ட செய்திக்கு விளக்கம் கொடுத்துள்ளதுடன், தனது பிரேக்-அப் விடயம் பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், தனுஷ் எனது நெருங்கிய நண்பர் மாத்திமே, அவர் சகோதரர் போல என கூறியுள்ளார். மேலும் தான் ஒரு நடிகை, என்பதற்காக தான் தனது முன்னாள் காதன் தன்னை பிரேக்கப் செய்துவிட்டார் என்பதையும் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.