ரகசியமாக ராதிகாவிற்கு நடந்து முடிந்த ஆபரேஷன்..என்ன ஆனது? பிரபலம் கொடுத்த ஷாக்..
சினிமா பற்றிய பல விஷயங்களை யூடியூப்பில் பேட்டிகள் கொடுத்து பகிர்ந்து வருபவர் தான் பத்திரிக்கையாளர் அந்தணன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சூர்யாவின் கருப்பு படம் ஓடிடி ரைட்ஸ் வாங்காமல் இருப்பதால் தான் வெளியாவதில் சிக்கல்.

சூர்யாவின் வெளியான படங்கள் தோல்வியானதால் ஓடிடி நிறுவனங்கள் கருப்பு படத்தை வாங்க தயங்குகிறார்கள். படத்தை வெளியிடுங்கள் பின் பார்க்கலாம் என்று கூறுகிறார்களாம்.
இதனால் தள்ளிப்போன கருப்பு படம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜனநாயகன், பராசக்தி படம் ரிலீஸாவதால் கருப்பு படம் ஏப்ரல் மாதம் தான் ரிலீஸ் செய்யமுடியும். இதனால் எந்த தேதியில் கருப்பு படம் வெளியாகும் என்று தெரியவில்லை. இப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரச்சனைகளை தீர்க்கும்.
அதேபோல் இப்படத்தினை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தை குறுகிய காலத்தில் எடுக்க முடிவெடுத்து பல வேலைகள் விறுவிறுப்பாக நடந்தது. அப்படத்தில் ராதிகாவிற்கு ஒரு முக்கிய ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. ராதிகாவிற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது.

இந்நேரத்தில் தான், ராதிகா கீழே விழுந்து காலில் அடிபட்டு ஆப்ரேசன் நடந்துள்ளது. இதனால் ராதிகா ஓய்வு எடுத்துவிட்டு வந்த நேரத்தில், அவரின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் போய், இறந்துவிட்டார்கள். இதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்தணன் தெரிவித்துள்ளார்.