நாக சைதன்யா பற்றி எதுவும் தெரியாது.. நாகர்ஜுனா இரண்டாம் மனைவி அமலா இப்படி சொல்லிட்டாரே!
தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகர்ஜுனா. இவருடைய மூத்த மகன் நாக சைதன்யா தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
இதில், நாகர்ஜுனாவின் இரண்டாவது மனைவி அமலா, நாக சைதன்யா குறித்து பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " நாகர்ஜுனாவை நான் திருமணம் செய்த பின் எனக்கு நாக சைதன்யா குறித்து எதுவும் தெரியாது. அதற்கு முக்கிய காரணம் நாக சைதன்யா சென்னையில் வளர்ந்தார்.
கல்லூரிக்கு ஹைதராபாத் வந்தபோதுதான் அவரை முழுமையாக அறிந்தேன். நாக சைதன்யா அற்புதமானவர், பொறுப்பானவர். தந்தையின் பேச்சை மீறமாட்டார்.
அகில் என் மகன் என்பதால் என் தாக்கம் அதிகம். இருவரையும் சுதந்திரமாக வளர்க்க நானும் நாகர்ஜுனாவும் முடிவு செய்தோம்" என்று தெரிவித்துள்ளார்.