"இதை சத்தியமா எதிர்பார்க்கல.." மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட கல்யாண வீடியோ.. அலறும் இண்டர்நெட்..!

"இதை சத்தியமா எதிர்பார்க்கல.." மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட கல்யாண வீடியோ.. அலறும் இண்டர்நெட்..!

தமிழ் சினிமாவில் பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவைச் சுற்றிய திருமண விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களது திருமணம் மற்றும் அதைச் சுற்றிய சர்ச்சைகள், புகார்கள், மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜை தனது கணவர் என்று கூறி, சமூக வலைதளங்களில் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் வெளியான ஒரு வீடியோவில், ரங்கராஜ், "என்னடி பொண்டாட்டி, லவ் யூ" என்று கூறி, ஜாய்க்கு முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

மற்றொரு வீடியோவில், இருவரும் 'லிப்-டு-லிப்' முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி, "இது எப்போது?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ, பலரும் ஜாயின் இந்த பதிவுகளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர்.

ஜாய், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு கோவிலில் ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது பெற்றோர் இந்த விஷயத்தை வெளியே பகிர வேண்டாம் என்று கேட்டதால் அமைதியாக இருந்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், தற்போது ரங்கராஜ் தன்னை ஒதுக்குவதாகவும், தனது குழந்தையின் நலனுக்காக பேசுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த பதிலும் அளிக்காமல், தனது தொழில் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு கவனத்தை திசை திருப்பியுள்ளார்.

நடிகர் பிரேமின் மகன் கௌஷிக் சுந்தரத்தின் திருமணத்திற்கு தனது மாதம்பட்டி கேட்டரிங் நிறுவனம் உணவு பரிமாறியதை பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த திருமணத்தில் நடிகர்கள் கார்த்தி, சிவகுமார், சிவகார்த்திகேயன், சூரி, சேத்தன், தீபக், ஹரிஷ் கல்யாண், தியாகராஜன், சந்தான பாரதி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

"மாதம்பட்டி கேட்டரிங் வெறும் சாப்பாட்டை மட்டும் அல்ல, தம்பதிக்கு அன்பையும், ஆசியையும் பரிமாறியது," என்று கேப்ஷனுடன் இந்த வீடியோவை பதிவிட்டார் ரங்கராஜ்.

ஜாயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், தனது தொழில்முறை வாழ்க்கையை மட்டும் முன்னிலைப்படுத்திய இந்த பதிவு, சமூக வலைதளங்களில் மேலும் விவாதத்தை தூண்டியுள்ளது. "ஜாய் பற்றி ஏதாவது சொல்லுங்கள் ரங்கராஜ்!" என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

ஜாயின் புகாரும், சமூக வலைதள விவாதமும்

ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாகவும், தான் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், கருவை கலைக்குமாறு கூறி, தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

இருப்பினும், அவர் ரங்கராஜுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியிடமிருந்து "ஜுடிஷியல் செபரேஷனில்" இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் ஜாய் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஒரு தரப்பினர், "ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர். அவரது முதல் மனைவி ஸ்ருதியிடமிருந்து முறையாக விவாகரத்து பெறாமல், ஜாயை திருமணம் செய்தது தவறு," என்று விமர்சிக்கின்றனர்.

மற்றொரு தரப்பு, "ஜாய், ரங்கராஜ் திருமணமானவர் என்று தெரிந்தும் அவருடன் உறவில் இருந்தது சரியல்ல. இப்போது தாயாக்கப்பட்டு ஏமாற்றப்பட்டதாக புகார் செய்வது நியாயமற்றது," என்று வாதிடுகின்றனர். "ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி நியாயம் கேட்டு வந்தால் என்ன ஆகும்?" என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஜாய் கிரிசில்டா, தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார். ‘பொன்மகள் வந்தாள்’, ‘ஜில்லா’, ‘புரூஸ் லீ’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.

சிவகார்த்திகேயன், சினேகா, திவ்யதர்ஷினி (டிடி), நிக்கி கல்ராணி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு ஆடைகள் வடிவமைத்துள்ளார். இவருக்கு முன்பு ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்கை 2018-ல் திருமணம் செய்து, ஒரு மகன் பிறந்த பின்னர் 2023-ல் விவாகரத்து பெற்றார்.

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டாவின் திருமண விவகாரம், சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாத பொருளாக உள்ளது. ஜாய் தனது அடுத்த வீடியோவில் என்ன பகிரப் போகிறார் என்று நெட்டிசன்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அதே நேரத்தில், ரங்கராஜ் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசுவாரா, அல்லது தனது தொழில்முறை வாழ்க்கையை மட்டும் முன்னிலைப்படுத்துவாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று. இந்த சர்ச்சை, தனிப்பட்ட உறவுகள் மற்றும் பொது வெளியில் அவை குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News