ஒரே பாடலில் ஒரு பட சம்பளம் வாங்கும் நடிகை!! அதுவும் இத்தனை கோடியாம்.
நடிகைகள் ஒரு படம் ஹிட்டாகினால் உடனே தங்களில் சம்பளத்தை உயர்த்தி பேசுவார்கள். அதேபோல் ஒரு ஐட்டம் பாடலில் ஆடி அப்பாடல் ஹிட்டாகினார். சில நடிகைகள் படத்தில் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக வெறும் 5 நிமிடத்தில் பெற்றுவிடுவார்கள்.

அப்படியாக புஷ்பா படத்தில் ஷ்பா படத்தில் சமந்தாவும், ஜெயிலர் படத்தில் தமன்னாவும், கூலி படத்தில் பூஜா ஹெக்டேவும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு ஒரு பட சம்பளத்தை 5 நிமிடத்திலேயே சம்பளமாக பெற்றனர்.
இந்நிலையில் புச்சி பாபு இயக்கத்தில் தெலுங்கில் பெத்தி என்ற படம் உருவாகி வருகிறது. ராம் சரண் நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் இப்படம் பிரமாண்டமுறையில் உருவாகி வருகிறது. பான் இந்தியா படமாக இந்த படத்தை படக்குழு உருவாக்கி வருகிறார்கள்.

பெத்தி படத்தில் இடம் பெறும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமந்தாவுடன் படத்தின் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
ஏற்கனவே புஷ்பா படத்தின் ஊ சொல்றியா பாடலுக்கு 4 கோடி அளவில் சம்பளமாக பெற்றிருந்தார் சமந்தா. தற்போது இந்த பாடலுக்கு எவ்வளவும் சம்பளம் வாங்குவாரோ என்ற கேள்வி தெலுங்கு வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.