அப்போது இறுக்கமா கட்டிப்புடிச்சி அதை பண்ண சொன்னாரு.. ஆனா.. இப்போ.. ரகசியம் உடைத்த ரவீனா..
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டு போடுவதற்கு வந்த ஒரு நடிகைக்கு, ரெட் கார்டு தடை காரணமாக ஓட்டு போட அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று ஆண்டுகளாக சங்க உறுப்பினராக இருக்கும் இந்த நடிகை, தனக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு தொழில் தடை காரணமாக தேர்தலில் வேட்பாளராக நிற்கவோ, ஓட்டு போடவோ முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
ரெட் கார்டு தடையை அறிவிக்கும் முன், சங்கத்திலிருந்து எவ்வித முறையான அறிவிப்போ அல்லது விளக்கமோ தனக்கு வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
"நான் சங்கத்தில் உறுப்பினராக நின்று, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கலைஞர்களுக்கு உதவ விரும்பினேன். ஆனால், ரெட் கார்டு காரணமாக உறுப்பினராகவோ, கமிட்டி உறுப்பினராகவோ நிற்க முடியவில்லை," என்று அவர் கூறினார்.
மேலும், தேர்தல் நாளன்று ஓட்டு போட வந்தபோது, பரத் மற்றும் தேவானந்த் தலைமையிலான குழு அளித்த ஆட்சேபனை கடிதத்தால் தனது ஓட்டு உரிமை மறுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது பண்ணது யாரு அப்படின்னு கேட்டதுக்கு வந்து நம்ம பரத் அண்ணா அண்ட் அவங்களோட டீம்ல இருக்கற தேவானந்த் அவங்க தான் வந்து இந்த அப்ஜெக்ஷன் லெட்டர் கொடுத்திருக்காங்க அப்படின்னு.
சரி ஓகே அப்ஜெக்ஷன் லெட்டர் கொடுத்துருக்கீங்க. நான் உங்களதான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் வந்து பார்கறேன். வந்து பார்க்கும்போது மட்டும் இறுக்கமா கட்டிப்பிடிச்சு வாமா வாமா மறக்காம ஓட்டு போட்டுருமான்னு சொன்னீங்க.. அப்போ எப்படி என்ன ஓட்டு போட சொல்லி கேக்குறீங்கன்னு எனக்கு புரியவே இல்ல.
யாராவது ஒரு ஏதாவது ஒரு பொண்ணு வந்து ஏதாவது ஒரு விஷயத்தை ஏதாவது சொல்லிட்டாங்கன்னா உடனே ரெட் கார்டு கொடுத்து அவங்கள பேன் பண்ணி சில வருஷம் வச்சிருவீங்க இதனால சரி ஓகே என்னால உங்களுக்கு லாஸ் ஆயிடுச்சு.. ஐ பீல் வெரி சாரி அபௌட் தட்.. ஆனா நீங்க என்ன Ban பண்ணி நான் சம்பாதிக்காம இருந்ததுனால.. உங்களுக்கு நீங்க லாஸ் ஆனது உங்களுக்கு திருப்பி கிடைச்சிருமா.. இல்ல, அதுல என்ன உங்களுக்கு கிடைக்குது.. சின்ன ஒரு சந்தோஷம்.. அந்த சந்தோஷம்.. அந்த சந்தோஷமா நீங்க இருக்கீங்களா..? ஓகே நீங்க சந்தோஷமா இருங்க.
ரெட் கார்டு தொழில் தடை மட்டுமே என்றும், ஓட்டு போடும் உரிமையை பறிப்பது நியாயமற்றது என்றும் அவர் வாதிட்டார். "நான் 21 வயதாகிறேன், மூன்று ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன்.
எனது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு சங்கம் முறையான விளக்கம் அளிக்கவில்லை," என்று அவர் கூறினார். முன்னாள் தலைவர் சிவன் ஸ்ரீனிவாசன் இந்த தடையை தடுக்க முடியவில்லை என்றும், தனது பக்க நியாயத்தை விளக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம், நடிகர் சங்கத்தில் நிர்வாக விதிமுறைகள் மற்றும் உறுப்பினர்களின் உரிமைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
"யாராவது ஒரு பிரச்சனையை சொன்னால் உடனே ரெட் கார்டு கொடுத்து தடை விதிப்பது நியாயமா? இதனால் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறோம்," என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் சங்க உறுப்பினர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.