உயிருக்கு உயிரா லவ் பண்றேன்னு சொன்னான்.. ஆனால்.. ப்ரேக்அப் குறித்து அனுஷ்கா கதறல்!

உயிருக்கு உயிரா லவ் பண்றேன்னு சொன்னான்.. ஆனால்.. ப்ரேக்அப் குறித்து அனுஷ்கா கதறல்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கும் அனுஷ்கா ஷெட்டி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது பள்ளி பருவ காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார், இது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பாகுபலி’, ‘அருந்ததி’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற அனுஷ்கா, தன

து ஆறாம் வகுப்பு காலத்தில் நடந்த ஒரு இனிமையான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, “நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, என் வகுப்பில் இருந்த ஒரு பையன் என்னிடம் வந்து, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று கூறினான். அவன் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக சொன்னான். அந்த வயதில் ‘காதல்’ என்றால் என்னவென்று கூட எனக்கு புரியவில்லை. 

ஆனால், ‘சரி’ என்று சொல்லி அந்த காதலை ஏற்றுக்கொண்டேன். அது ஒரு அப்பாவி வயதில் நடந்த இனிமையான நினைவு, இன்றும் என் மனதில் அழகாக இருக்கிறது.” 

இந்த உருக்கமான பகிர்வு, ரசிகர்களை நெகிழவைத்துள்ளது. 43 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அனுஷ்கா, பிரபாஸுடன் காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர். தற்போது விக்ரம் பிரபு உடன் ‘காட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த பேட்டி, அவரது எளிமையான பள்ளி பருவ நினைவுகளை வெளிப்படுத்தி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில், “அனுஷ்காவின் இந்த இனிமையான நினைவு மனதை தொடுகிறது,” என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES