இப்போ எனக்கு பயம் இல்ல.. கேரவேனில் தனுஷ் இப்படித்தான் இருப்பார்.. போட்டு உடைத்த அமலா பால்!
தனுஷ் நடிப்பில், சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் ஜூன் 20, 2025 அன்று வெளியாகிறது. இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிரமாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.
தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார், மேலும் தேரே இஷ்க் மெய்ன் (ஹிந்தி), மாரி செல்வராஜ், தமிழரசன் பச்சமுத்து, ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரின் படங்களிலும் நடிக்க உள்ளார்.
தனுஷின் 25-வது படமான வேலையில்லா பட்டதாரி (விஐபி), வேல்ராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், தனுஷ் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
அமலா பால், சரண்யா, சமுத்திரகனி, விவேக் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில், தனுஷின் இயல்பான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. வேலையில்லாத இளைஞனாகவும், தாயை இழந்த மகனாகவும் அவர் மனதைத் தொட்டார்.
சமீபத்தில் அமலா பால் அளித்த பேட்டியில், விஐபி படப்பிடிப்பில் தனுஷுடனான அனுபவத்தைப் பகிர்ந்தார். ஒருவேளை இதை அப்போதே சொல்லி இருந்தால் என் தலையில் தனுஷ் கொட்டு வைத்திருப்பார். ஆனால், இப்போது எனக்கு பயம் இல்லை.. அதனால் சொல்கிறேன்.. “தனுஷ் பார்பதற்கு தான் ஒல்லியாக இருக்கிறார், ஆனால், அதிகமாக சாப்பிடுவார்.
சைவ உணவு மற்றும் முட்டையை விரும்புவார். சாப்பிடும்போது கவுண்டமணியின் காமெடி காட்சிகளை டிவியில் பார்த்தபடி உண்பார்,” என்று கூறினார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அமலா பால், முன்னர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்றார். தற்போது ஜகத் தேசாயை மணந்து, இலை என்ற மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தனுஷின் குபேரா படமும், அமலாவின் பேட்டியும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.