தொடர் மரணங்கள்.. படகு விபத்து.. காந்தாரா 2 ஷூட்டிங்கில் என்ன நடக்கிறது?
காந்தாரா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே காந்தாரா 2 படக்குழுவினர் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். முதலில் நடிகர் கபில் என்பவர் ஷூட்டிங் இடையில் கர்நாடகாவின் சவுபர்ணிகா நதியில் மூழ்கி மரணம் அடைந்தார்.
அதன் பின் ராகேஷ் புஜாரி என்ற நடிகர் மாரடைப்பு ஏற்ப்பட்டு இறந்தார். மேலும் சமீபத்தில் விஜூ விகே என்ற நடிகர் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்.
இப்படி தொடர்ந்து மரணங்கள் படக்குழுவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் 30 பேர் பயணித்த படகு தற்போது விபத்தில் சிக்கி இருக்கிறது.
ஷிவமோகா பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது. ஆழம் அதிகம் இல்லாதால் படக்குழு உயிர் தப்பி இருக்கிறது.