மீண்டும் திரையில் ஜோடி சேரும் சமந்தா - நாக சைதன்யா.. அப்போ இதுதான் காரணமா?

மீண்டும் திரையில் ஜோடி சேரும் சமந்தா - நாக சைதன்யா.. அப்போ இதுதான் காரணமா?

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சுபம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

நாகா சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். ஆனால், முதன் முதலில் ஜோடியாக சேர்ந்த நடித்த படம் தான் 'யே மாய சேசாவே'. இயக்குநர் கவுதம் மேனன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்தான் யே மாய சேசாவே. 2010ம் ஆண்டு வெளிவந்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான்  இசையமைத்திருந்தார்.

மீண்டும் திரையில் ஜோடி சேரும் சமந்தா - நாக சைதன்யா.. அப்போ இதுதான் காரணமா? | Samantha Ex Husband Movie Re Release

இந்நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இப்படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இப்படத்தை வரும் ஜூலை 18ம் தேதி ரீ ரிலீஸ் செய்யபோகிறார்களாம். இதன் மூலம் இந்த ஜோடியை மீண்டும் இணைந்து திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  

மீண்டும் திரையில் ஜோடி சேரும் சமந்தா - நாக சைதன்யா.. அப்போ இதுதான் காரணமா? | Samantha Ex Husband Movie Re Release

LATEST News

Trending News