அந்த இடத்தில் கேமரா.. சக நடிகருடன் ரொமான்ஸ்.. எனக்கு தெரியாமலே.. நடிகை ரிது வர்மா ஓப்பன் டாக்!
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து, தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ரிது வர்மா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது நடிப்பு அணுகுமுறை குறித்து விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ‘பெல்லி சூப்புலு’, ‘ஒகே ஒக ஜீவிதம்’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அவர். இந்தப் பேட்டியில், தனது நடிப்பு நுட்பங்களைப் பற்றி பேசிய ரிது, “படப்பிடிப்பு தளத்தில் இந்த இடத்தில் கேமரா இருக்கிறாதா.. அந்த இடத்தில் கேமரா இருக்கிறதா.. எங்கு உள்ளது என்பதை நான் கவனிப்பதில்லை.
கேமராவைப் பற்றி சிந்திக்காமல், காட்சியில் முழுமையாக வாழ்ந்து நடிப்பேன். சக நடிகருடன் ரொமான்ஸ் காட்சியாக இருந்தாலும், வேறு எந்தக் காட்சியாக இருந்தாலும், சக நடிகருடன் இயல்பாக உணர்ந்து, கேமரா இருப்பதை எனக்கு தெரியாமலே பார்த்து கொள்வேன்,” என்றார்.
ஆரம்ப காலத்தில் கேமரா மற்றும் மேடை பயத்தை எதிர்கொண்டதாகவும், அந்த பயத்தை மறந்து, முன் யாரும் இல்லை என்று நினைத்து நடிப்பதற்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
“நான் மேடையில் பேசுவதற்கோ, நடனமாடுவதற்கோ பயந்தேன். ஆனால், கேமராவையும், பார்வையாளர்களையும் மறந்து, கதாபாத்திரமாக மாறுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த அணுகுமுறை, அவரது தொழில்முறை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார். ரிது வர்மாவின் இந்த வெளிப்படையான பேச்சு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“ஒரு நடிகையாக தனது நடிப்பு நுணுக்கங்களை திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்,” என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவரது இயல்பான நடிப்பு முறையும், தன்னம்பிக்கையும் இளம் நடிகர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.
‘ஸ்வாக்’ மற்றும் ‘மசாக்கா’ போன்ற வரவிருக்கும் படங்களில் ரிது வர்மாவின் நடிப்பு மேலும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.