ஆண் துணை கட்டாயப்படுத்தி அதை பண்ணக்கூடாது.. அந்த உணர்ச்சி வரும் போது.. அம்மு ஓப்பன் டாக்!
பிரபல தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அவர் கூறியதாவது, என்னுடைய எண்ண அலைகளுக்கு ஏற்றார் போல ஒருவரை சந்திக்கும்போது கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்வேன்.
என்னால் திருமணம் செய்து கொள்ள முடியும், திருமணம் செய்த பிறகு அந்த திருமண உறவை என்னால் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற உணர்வு வரும் போது தான் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும்.
எல்லோரும் திருமணம் செய்கிறார்கள், எல்லோரும் கேட்கிறார்கள், ஒரு ஆண் துணை வேண்டுமே என்பதற்காக திருமணம் செய்து கொண்டு மூன்று மாதம் கழித்து தாலியை கழட்டி வைத்துவிட்டு செல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
அதற்கு பெயர் திருமணமும் கிடையாது. அதற்கு திருமணம் செய்ய அவசியமும் கிடையாது. திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான ஒரு விஷயம்.
எனக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு என்னுடைய மாமனார் மாமியாருக்கு நல்ல மருமகளாக என்னுடைய குழந்தைகளுக்கு அம்மாவாக ஒரு இல்லத்தரசியாக வாழ வேண்டும் என்று மிகப்பெரிய ஆசை இருக்கிறது.
அதற்கு ஏற்றார் போல என்னுடைய இளவரசனுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்வதை விடவும் நம்முடைய எண்ணத்திற்கு, நம்முடைய கணவர் மாலை நேரம் வீட்டுக்கு வந்ததும் முகம் கோணாமல் சிரித்து பேசி அனுசரணையாக இருப்பார் என்றால் அப்போது.. ஒருவேளை அவருக்கு ஒரு கஷ்டமான விஷயம் என்றால் நான் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.. இப்படி வாழ்க்கையில் திருமணம் என்றால்.. திருமணம் செய்யலாம்.
ஆனால், ஒரே ஒருவரை தான் திருமணம் செய்ய வேண்டும் ஒரே ஒரு தாலியை தான் கட்ட வேண்டும் என பேசி இருக்கிறார் நடிகை மற்றும் தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன்.