உடலுறவு.. கோடி கோடியா பணம்.. ஷீத்தல் பெற்றோர் யாரு தெரியுமா..? பப்லூ கூறிய பகீர் தகவல்!
பிரபல நடிகர் பப்லூ பிரித்விராஜ், தன்னை விட 30 வயது குறைவான ஷீத்தல் என்பவருடன் காதல் உறவில் இருந்தது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வயசுலயும் பொம்பள சோக்கு கேக்குதா.. என்ற கேள்விக்கு கேக்குதே.. இப்போவும் நான் இளமையுடன் தான் இருக்கிறேன். எனக்கு கேக்குது தான் என உடலுறவு குறித்து ஓப்பனாக பேசினார் பப்லூ.
இந்த உறவு குறித்து நெட்டிசன்கள் பலரும் பப்லூவை "Sugar Daddy" என கிண்டல் செய்தனர். இந்நிலையில், பப்லூ பிரித்விராஜ் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஷீத்தலுடனான தனது உறவு பற்றி விளக்கிய பப்லூ, "பாவம், யாருக்கும் Sugar Daddy என்றால் என்னவென்று தெரியவில்லை. எனது வங்கி கணக்கில் பணம் இல்லை. நான் ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் 20,000 ரூபாய் வாடகை செலுத்தி வாழ்ந்து கொண்டிருந்தேன்.
அப்போது தான் ஷீத்தலை சந்தித்தேன். அவரது தந்தை ஆந்திராவில் போலீஸ் கமிஷனராக உள்ளார். அவரது தாயார் ஒரு வழக்கறிஞர். ஷீத்தல் ஒரு கோடீஸ்வரி. அவர் எனது பணத்திற்காக என்னுடன் உறவில் இல்லை.
எனது அழகுக்கும் அறிவுக்குமே அவர் வந்தார்," என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், "Sugar Daddy என்றால், பணத்தை வைத்து காதலை வாங்குவது என்று அர்த்தம்.
ஆனால், எனது உறவு அப்படியானது இல்லை," என்று திட்டவட்டமாக மறுத்தார். பப்லூவும் ஷீத்தலும் தங்களது உறவு குறித்து ஒரு பேட்டியில் இணைந்து பேசியிருந்தாலும், பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த பேட்டியில் பப்லூவின் விளக்கம், அவரது காதல் உறவு குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக உள்ள நிலையில், பப்லூவின் இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.