குடிபோதையில் அதை செய்தால் பறப்பது போல இருக்கும்.. ரேகா நாயர் சர்ச்சை பேச்சு!
நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஈஷா யோகா மையத்தில் தனது தோழி இருப்பது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், “எனது தோழியை ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்க முடியவில்லை.
அவரிடம் பேசும்போது, ஏதோ ஒரு விஷயத்திற்கு அவர் அடிமையாக இருப்பது போல உணர்கிறேன். குடிபோதையில் இருப்பவர்கள் பறப்பது போல பேசுவது போல, அவர் ஏதோ ஒரு விஷயத்தில் அடிமைப்பட்டு இருக்கிறார்.
அங்கு இருப்பதையே மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் உணர்கிறார். ஆனால் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை,” என்று கூறினார். இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.
ரேகா நாயரின் பேச்சை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆன்மீகத்தை குடிபோதையுடன் ஒப்பிடுவது தவறு என்று விமர்சிக்கின்றனர். “ஆன்மீகமும் ஒரு வகையில் போதைதான். ஆனால் மது போன்றவற்றுக்கு அடிமையாவதை விட, ஆன்மீகத்திற்கு அடிமையாவது சிறப்பு.
அவர்களுக்கு அங்கு மன அமைதி என்ற பெரிய போதை கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது, அவர்களை மன அமைதியற்ற, நெருக்கடியான சாதாரண வாழ்விற்கு இழுக்க முயல்வது வேடிக்கையானது,” என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், “நாம் இந்த நெருக்கடியான சூழலில் வாழப் பழகிவிட்டோம். ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடியாது. சிலர், போதை பழங்களுக்கு ஆளாகிறார்கள்.. சிலர் பொழுதுபோக்கு விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள், சிலர் ஆன்மீகத்தில் தங்களை அர்ப்பணித்து மன அமைதியைத் தேடுகிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதை குடிபோதையுடன் ஒப்பிடுவது முறையற்றது,” என்று ரேகாவை விமர்சிக்கின்றனர்.
மறுபுறம், ரேகாவின் கருத்தை ஆதரிக்கும் சிலர், ஆன்மீக மையங்களில் சில சமயங்களில் தனிநபர்கள் தங்கள் சுய அடையாளத்தை இழந்து, ஒரு வகையான மனக் கட்டுப்பாட்டிற்கு உள்ளாகலாம் என்று வாதிடுகின்றனர்.
இது உலகளவில் அனைத்து மத ஆன்மீக அமைப்புகள் மீது எழுந்துள்ள புகார்களுடன் ஒத்துப்போகிறது. ஈஷா யோகா மையம் மீதும் இதுபோன்ற விமர்சனங்கள் முன்பு எழுந்துள்ளன, ஆனால் அவை நிரூபிக்கப்படவில்லை.
ரேகா நாயரின் இந்தக் கருத்து, ஆன்மீகம், தனிநபர் சுதந்திரம், மற்றும் சமூக எதிர்பார்ப்புகளுக்கு இடையேயான முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஆன்மீகம் மன அமைதியைத் தரும் ஒரு பாதையாக இருக்கலாம், ஆனால் அதை மற்றொரு போதைக்கு ஒப்பிடுவது சரியானதா என்பது விவாதத்திற்குரியது.
இது ரேகாவின் பேச்சு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.