இதற்கு மேலும் காத்திருக்க முடியாது.. ரூட்டை மாற்றிய ஷிவானி நாராயணன்!
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது திறமையாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியின் 'பகல் நிலவு' தொடர் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'பிக்பாஸ் தமிழ் சீசன் 4' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் புகழ் அடைந்தார். இணையத்தில் இப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் தற்போது தனது ரூட்டை மாற்றி இருக்கிறார்.
பகல் நிலவு, சரவணன் மீனாட்சி 3, ராஜா ராணி, ரெட்டை ரோஜா என பல சீரியலில் நடித்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். அந்த சீரியலைத் தொடர்ந்து மேலும் பிரபலமாவதற்காக பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டார். ஆனால், அதில் அவரால் தாக்குபிடிக்கமுடியாமல் பாதியிலேயே வெளியேறினார். அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக இரண்டே இரண்டு சீனில் நடித்திருந்தார். அதன்பின், வீட்டில விசேஷம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என பல படங்களில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் பம்பர் என்ற படத்தில் வெற்றிக்கு ஜோடியாக ஹீரோயினாகக்கூட நடித்தார். ஆனால், அந்த படம் வெளியானதுக்கூட யாருக்கும் தெரியவில்லை.
பெரிய கனவோடு சினிமாவிற்கு வந்த ஷிவானி நாராயணனுக்கு எதிர்பார்த்தபடி சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால், மீண்டும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்தார். அதுவும் அலுத்துப்போனதால், ஷிவானி நாராயணன் தற்போது தனது ரூட்டை மாற்றி மாடலிங் துறையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஷிவானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிற மார்டன் உடையில், கேட்வாக் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ஷிவானி பதிவிட்ட சிறிது நேரத்திலேயே ஆறு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும், பலரும் இது சரியான முடிவு தான் என கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.