எல்லோரையும் சிரிக்க வைக்கும் தொகுப்பாளினி பிரியங்கா வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டம்.. பிரபலம் ஓபன் டாக்
தொகுப்பாளினி பிரியங்கா, புதுப்பெண்ணாக ஜொலித்து வருபவர்.
இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். திடீரென கடந்த ஏப்ரல் 16ம் தேதி தனது நீண்ட நாள் நண்பர் வசி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படங்களை அவரே வெளியிட ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி புகழ் சரத், பிரியங்கா குறித்தும் அவரது திருமணம் பற்றியும் பேசியுள்ளார்.
அதில் அவர், பிரியங்கா எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களை ஜாலியாகவும் கலகலப்பாகவும் வைத்திருப்பார், எல்லோருக்கும் தெரிந்தது தான்.
ஆனால் அவர் மிகவும் Sensitive ஆனவர், அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் அதிகம். பிரியங்கா அழுது பார்த்திருக்கிறேன், அவருடைய வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது என அறிந்ததுமே ரொம்பவே நாங்க சந்தோஷப்பட்டோம் என பேசியுள்ளார்.