திருமணத்திற்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கு.. ஓப்பனாக சொன்ன VJ பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் கலக்கி வருகிறார்கள். டிடி, பாவனா, ரம்யா, திவ்யா, பிரியங்கா, ஜாக்குலின், அர்ச்சனா என பலரை சொல்லிக்கொண்டே போகலாம்.
இதில், ஒரு பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா பிரவீன் என்பவரை திருமணம் செய்து சில காரணங்களால் அவரை பிரிய தனது அம்மாவுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், திடீரென சில தினங்களுக்கு முன் தொகுப்பாளினி பிரியங்கா வசி என்பவரை கரம்பிடித்தார். இது காதல் திருமணம் ஆகும்.
இந்த திருமணம் பலருக்கு அதிர்ச்சி அளித்தாலும் ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தனது திருமண வாழ்க்கை குறித்து பிரியங்கா வெளிப்படையாக சொன்ன விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " என் திருமணத்திற்கு பின் எனக்குள் இருக்கும் பீலிங் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் ஜாலியா இருக்கேன்" என்று தெரிவித்துள்ளார்.