விஷாலுடன் காதல் கிசுகிசு.. முதல் முறையாக வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசி குமார் நடிப்பில் உருவான நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. இப்படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
இதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஜீனியஸ், வீரம், பூஜை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்து வெளிவந்த பணி திரைப்படம் நல்ல மாபெரும் வெற்றியடைந்தது.
சிறு வயதிலிருந்தே காத்து கேளாத மற்றும் வாய் பேச முடியாத நடிகை அபிநயா இன்று தனது தன்னம்பிக்கையால் சினிமாவில் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார். பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்.
நடிகை அபிநயா நடிகர் விஷாலை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தனது நண்பர் ஒருவரை கடந்த 15 வருடங்களாக காதலிப்பதாகவும், இனி தன்னை எந்த நடிகருடனும் சேர்த்து வைத்து பேச வேண்டாம் என்றும் கூறியிருந்தார். ஆனால், தனது காதலர் யார் என அவர் கூறவில்லை.
இந்த நிலையில், முதல் முறையாக தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை அபிநயா வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வருங்கால கணவருடன் அபிநயா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.