சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்... நிகழ்ச்சி மேடையில் கதறிய அழுத நடிகை வரலட்சுமி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3.
24 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மக்களின் மனதை பல போட்டியாளர்கள் கவர்ந்து வருகிறார்கள். பஞ்சமியை தனது வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாரி அவரது மகன்களின் படிப்பிற்காக ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளார் சரத்குமார்.
தற்போது இந்த வார எபிசோடில் ஒரு சோகமான விஷயத்தை கூறி அழுதுள்ளார் நடிகை வரலட்சுமி. அதில் அவர், என் அம்மா, அப்பா இருவருமே வேலை செய்பவர்கள்.
மற்றவர்களின் வீட்டில் விட்டுவிட்டு பார்த்துக் கொள்ள சொல்வார்கள். 5ல் இருந்து 6 பேர் சிறுவயதில் என்னை பாலியல் தொந்தரவு செய்துள்ளனர் என கூறி அழுதுள்ளார்.