ராதிகாவின் நிறைவேறா அந்த காதல்.. ராதிகாவின் தற்போதைய நிலைமை.. கண்ணை வைத்தே அதை செய்த நடிகை...

ராதிகாவின் நிறைவேறா அந்த காதல்.. ராதிகாவின் தற்போதைய நிலைமை.. கண்ணை வைத்தே அதை செய்த நடிகை...

சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் அவர்கள் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை ராதிகா சரத்குமார் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.  

கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் நடிகை ராதிகா.

எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளத்துடன் திரையுலகில் நுழைந்தாலும், தனது திறமையால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் ராதிகா. 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  அவரது குடும்பமும் திரையுலக பின்னணி கொண்ட குடும்பம். 

தந்தை எம்.ஆர்.ராதா பிரபல நடிகர், சகோதரர் ராதாரவி மற்றும் சகோதரி நிரோஷாவும் திரையுலகில் தடம் பதித்தவர்கள்.

ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து ராதிகா பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 80 மற்றும் 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த அவர், 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின்பும் திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்த ராதிகா, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் தற்போது வரை பிஸியாக நடித்து வருகிறார்.

டாக்டர் காந்தராஜ் அந்த பேட்டியில் ராதிகா குறித்து பேசுகையில், "ராதிகா சினிமாவில் எப்படி கொடிகட்டி பறந்தாரோ அதேபோல சின்னத்திரையிலும் கலக்கினார்.  நமது தமிழ்ச் சமுதாயம் குட்டிச்சுவராகி நாசமாக போனதற்கு முக்கிய காரணமே ராதிகாதான்.  

அவர் இயக்கிய சித்தி சீரியலை பார்த்த பிறகுதான் மக்களுக்கு சீரியல் மீது ஆர்வம் அதிகமானது.  அதன் பிறகு அவர் அடுத்தடுத்து இயக்கிய அனைத்து சீரியல்களும் சூப்பர் ஹிட். 

அந்த தாக்கம் இன்று வரை தொடர்கிறது.  பலரும் சீரியல் மோகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ராதிகாவை தமிழ் சீரியல் உலகின் தாய் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்" என விமர்சித்தார்.

ராதிகா திறமையான நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாரதிராஜா அவரை அறிமுகப்படுத்தியபோது, "அழகு குறைவான நடிகை" என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார். 

ஆனால், கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்தவர் ராதிகா தான்.  அதே நேரத்தில், ராதிகாவின் பெயர் அந்த காலகட்டத்தில் அடிக்கடி செய்திகளில் அடிபட்டது.  சர்ச்சைக்குரிய நடிகையாகவும் அவர் அறியப்பட்டார் என்றும் காந்தராஜ் கூறினார்.

ராதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய டாக்டர் காந்தராஜ், "நடிகை ராதிகாவிற்கு ஒரு நிறைவேறாத காதல் இருந்தது.  அவர் ஒரு நடிகரை தீவிரமாக காதலித்தார்.  

அவர்கள் திருமணம் வரை செல்ல இருந்த நேரத்தில், அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருப்பது ராதிகாவிற்கு தெரியவந்தது.  இதனால் ராதிகா அந்த காதலை முறித்துக்கொண்டார்.  பின்னர் பிரதாப் போத்தனை திருமணம் செய்தார். 

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ராதிகாவை பிரிந்தவுடனே பிரதாப் போத்தன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொண்டார்.  இதனால் கோபமடைந்த ராதிகா, லண்டன் சென்று ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றார்.  

அவர் தான் ரிய்யான். ஆனால், அந்த வாழ்க்கையும் கசப்பாக அமைந்ததால், அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார்" என்று ராதிகாவின் காதல் வாழ்க்கையை பற்றி டாக்டர் காந்தராஜ் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

டாக்டர் காந்தராஜ் அவர்களின் இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராதிகாவின் திரையுலக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவரது இந்த கருத்துக்கள் ரசிகர்களிடையே பலவிதமான விவாதங்களை கிளப்பி உள்ளன.

LATEST News

Trending News