மரியாதை இல்லை.. பிரபுதேவா ஷோவில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ருஷ்டி அதிர்ச்சி புகார்

மரியாதை இல்லை.. பிரபுதேவா ஷோவில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ருஷ்டி அதிர்ச்சி புகார்

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சினிமா மற்றும் சின்னத்திரை இரண்டிலுமே பிரபலமான நடிகை தான். குக் வித் கோமாளி 4ம் சீசன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று இருந்தார்.

இந்நிலையில் சென்னையில் நாளை மறுநாள் பிரபுதேவா நடத்தும் Dance Concert ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதில் ஸ்ருஷ்டியும் பங்கேற்று நடனம் ஆட இருந்தார்.

மரியாதை இல்லை.. விலகிய ஸ்ருஷ்டி

இந்நிலையில் நடிகை ஸ்ருஷ்டி தற்போது அந்த ஷோவில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்.

இந்த முடிவுக்கு பிரபுதேவா காரணம் இல்லை, அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டளார்களிடம் இருந்து தனக்கு மரியாதை கிடைக்கவில்லை, சரியான திட்டமிடல் இல்லை என சொல்லி அவர் புகார் கூறி இருக்கிறார்.  

LATEST News

Trending News