காரைக்குடியில் நடைபெறும் ‘பராசக்தி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

காரைக்குடியில் நடைபெறும் ‘பராசக்தி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

பராசக்தி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.காரைக்குடியில் நடைபெறும் 'பராசக்தி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

 

சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாக்கி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க சுதா கொங்கரா படத்தை இயக்கி வருகிறார். இந்த படமானது கடந்த 1965 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்க அவருடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.காரைக்குடியில் நடைபெறும் 'பராசக்தி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!மேலும் ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி சிதம்பரம், மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.காரைக்குடியில் நடைபெறும் 'பராசக்தி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!மேலும் இது நான்காம் கட்ட படப்பிடிப்பு என்றும் சொல்லப்படுகிறது. அடுத்தது மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News