ஆதி நடிக்கும் ‘சப்தம்’….. இன்று மாலை வெளியாகும் முதல் பாடல்!
ஆதி நடிக்கும் சப்தம் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆதி. அந்த வகையில் இவர் மிருகம், மரகதநாணயம் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதே சமயம் இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ஈரம் எனும் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து சிந்து மேனன், நந்தா சரண்யா மோகன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை அறிவழகன் இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது 15 வருடங்களுக்கு பிறகு ஆதி, அறிவழகன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறது. அதன்படி இந்த படத்திற்கு சப்தம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படமும் ஈரம் படத்தை போல் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து மாயா மாயா எனும் முதல் பாடல் இன்று (பிப்ரவரி 13) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா ஆகியோர் ஆதியுடன் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.