கொரோனாவை வென்ற சூர்யா.... மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகிறார்

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 40’ படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

 

நவராசா படத்தில் நடித்து முடித்த சூர்யா, பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கத் தயாராகி வந்தார். ஆனால் அதற்கிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து கொரோனாவிலிருந்து மீண்டார். இருப்பினும் சில நாட்கள் வீட்டில் சுய தனிமையில் இருந்து வந்தார். எனவே சூர்யா இல்லாமலே சூர்யா 40 படத்தின் பூஜை நடைபெற்றது. தற்போது படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. 

 

சூர்யா

 

தற்போது சுய தனிமையில் இருந்து வந்த சூர்யா, மார்ச் 15-ம் தேதி முதல் பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES