முதல் கணவர் குறித்து மனம் திறந்த நீலிமா ராணி..! ஏன் விவாகரத்து..?.
நடிகை நீலிமா ராணி சீரியல் சினிமா என இரண்டு தளங்களிலும் பிஸியாக பயணித்து வரக்கூடிய ஒரு நடிகை பல்வேறு சீரியல்களில் ஹீரோயினாகவும் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு விலகி தயாரிப்பில் ஈடுபட்டார் பட தயாரிப்பில் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்து அதன் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் தன்னைவிட 12 வயது அதிகமான ஒரு நபரை தன்னுடைய 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர் நடிகை நீலிமா ராணி.
இந்நிலையில், கூகுளில் நீலிமா ராணி குறித்து தேடப்படும் அதிகப்படியான தேடுதலுக்கு அவரே விளக்கம் கொடுக்கும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நீலிமா ராணியின் முதல் கணவர் யார்..? என்று கேள்வி கூகுளில் அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது.
இதற்கு பதில் அளித்த நடிகை ரகுமான் ராணி கூகுளில் மட்டுமல்ல என்னிடம் நேரடியாகவே பலரும் இப்படி ஆன கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

என்னுடைய முதல் கணவர் வேறு யாரும் கிடையாது. தற்போது என்னுடைய கணவராக இருக்கும் இசைவாணன் தான்.
எனக்கு நடந்தது ஒரே ஒரு திருமணம் தான். என்னுடைய முதல் கணவரும் இவர்தான்.. கடைசி கணவரும் இவர்தான்.
ஒருவேளை எனக்கும் என்னுடைய கணவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதன் காரணமாக நான் யாரையாவது விவாகரத்து செய்துவிட்டு இவரை திருமணம் செய்து இருப்பேன் என்று யோசிக்கிறார்களோ..? என்னவோ..? என கூறினார் நீலிமா ராணி.
அதன் பிறகு முதல் கணவரை ஏன் விவாகரத்து செய்தார் நீலிமா ராணி என்று கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது.
இதற்கு பதில் அளித்த நடிகை நீலிமா ராணி நான் திருமணம் செய்தது ஒருவரை தான் அவரோடு தான் தற்போது வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
பிறகு ஏன் விவாகரத்து நடக்கப் போகிறது. முதல் கணவர் யார் என்று தேடியது கூட ஏதோ ஒரு வகையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் முதல் கணவரை ஏன் விவாகரத்து செய்தேன்..? என்று கூகுளில் தேடுகிறார்கள் இதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை என குபீர் சிரிப்புடன் பதில் அளித்திருக்கிறார்.