மகள் மாதிரின்னு சொல்லிட்டு அவளையே கல்யாணம் பண்ணிட்டாரு!! ஷோபா - பாலு மகேந்திராவால் ஷாக்கான நடிகை..

மகள் மாதிரின்னு சொல்லிட்டு அவளையே கல்யாணம் பண்ணிட்டாரு!! ஷோபா - பாலு மகேந்திராவால் ஷாக்கான நடிகை..

தமிழ் சினிமாவில் 70, 80 காலக்கட்டத்தில் டாப் இடத்தில் இருந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நடிகை வடிவுக்கரசி.

மகள் மாதிரின்னு சொல்லிட்டு அவளையே கல்யாணம் பண்ணிட்டாரு!! ஷோபா - பாலு மகேந்திராவால் ஷாக்கான நடிகை.. | Vadivukkarasi About Balu Mahendra Shoba Marriage

தற்போது தென்னிந்திய படங்களில் நடித்து வரும் வடிவுக்கரசி, இயக்குனர் பாலு மகேந்திரா நடிகை ஷோபாவை திருமணம் செய்தது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்ததாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

 

அதில், எனக்கு சினிமாவில் ஷோபா தான் பர்ஸ்ட் பிரண்ட். அவருடன் நெருக்கமாக பழகி, கேகே நகரில் அவரது வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஏணிப்படிகள் படத்தில் நடிக்கும் போது நெருக்கமாகி தோழிகளாகினோம். பசி படத்துக்காக தேசிய விருது வாங்கிய ஷோபாவை சந்தித்து வாழ்ந்து செல்ல சென்றேன்.

அப்போதுதான் ஷோபா - பாலு மகேந்திராவை திருமணம் செய்து கொண்டதாக சொன்னார்கள். எனக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஷோபா அதுபற்றி என்னிடம் கூறவில்லை. ஒருமுறை பாலு மகேந்திரா இலங்கையில் இருந்து வரும் போது ஷோபாவுக்கு கிஃப்ட் கொடுத்தார்.

அதில் அன்பு மகளே என்று எழுதி தான் கிப்ஃட் கொடுப்பார். மகள் மாதிரி பழகிட்டு அவளையே திருமணம் பண்ணிருக்காரேன்னு எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்ததாக நடிகை வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES