தன்னுடைய சிறுநீரில் அதை கலந்து கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை ..! ஏன் தெரியுமா..

தன்னுடைய சிறுநீரில் அதை கலந்து கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை ..! ஏன் தெரியுமா..

மாடல் அழகியாகவும் திரைப்பட நடிகையாகவும் வலம் வரும் ராகினி திவேதி ஆரம்ப காலங்களில் கன்னட படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர்.

இவர் 2009-ஆம் ஆண்டு வெளி வந்த வீர மதகரி என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகை தடம் பதித்த இவர் கன்னட மொழியில் வெளி வந்த கெம்பே கவுடா, ஷிவா பங்காரி, ராகினி ஐபிஎஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்

இந்நிலையில் கன்னட சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் இவர் மே மாதம் 24 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் இருக்கும் மோவில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் லக்மி பேஷன் வீக், ஸ்ரீலங்கா பேஷன் வீக் மற்றும் ரோஹித் பால் போன்றவற்றிற்கு மாடலாக விளங்கியவர். அதுமட்டுமல்லாமல் தருண் தஹிலியானி, மணிஷ் மல்கோத்ரா வீட்டு குமார் போன்றவர்களுக்கு மாடல் ஆக திகழ்ந்தவர்.

இவர் டிசம்பர் 2008 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று ரன்னரப்பாக அறிவிக்கப்பட்டார். மேலும் கர்நாடகாவில் நடந்த போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இவர் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.

மேலும் தற்போது கூட தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளர் சாதிக் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமாவை பின்னணியாகக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டது உங்கள் நினைவில் இருக்கலாம்.

ராகினி திவேதி கன்னட படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை ராகினி திவேதி.

இவரும் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் போதை பொருள் பயன்படுத்தி இருக்கிறாரா..? என்பதை கண்டறிவதற்காக இவருடைய சிறுநீரை பரிசோதிக்க நீதிமன்றம் உத்திரவிட்டதன் பெயரில் இவருக்கு சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது எங்கே உண்மை தெரிந்து விடுமோ.? என்று பயந்து போன நடிகை ராகினி திவேதி தன்னுடைய சிறுநீரில் குடிநீரை கலந்து மருத்துவர்களிடம் கொடுத்து இருக்கிறார்.

இதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராகினி திவேதி தன்னுடைய சிறுநீரில் குடிநீரை கலந்திருக்கிறார். மேலும் உண்மையை மறைக்க முயற்சி செய்திருக்கிறார் என அறிக்கை கொடுத்தனர்.

எனவே ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்ததன் மூலம் அவர் அந்த தவறை செய்திருக்கிறார் என்பது உறுதியாகியது. அதனை தொடர்ந்ந்து சிறையில் அடைக்கப்பட்டார் ராகினி திவேதி. இதில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்றும் உள்ளது. அது என்ன என்பதை இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

கர்நாடகா காவிரி பிரச்சனையின் போது இது எங்கள் தண்ணீர்.. தமிழ்நாட்டு தண்ணீர் கிடையாது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கேலி செய்து வீடியோ வெளியிட்டவர் இவர் என்பதும் கடைசியில் அதே தண்ணீர் தான் இவருக்கு ஆபத்தாகி போனது என்பது தான்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இதைத்தான் கர்மா என்று அழைப்பார்களா? என்பதை சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

மேலும் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காதவனுக்கு எப்படிப்பட்ட தண்டனை கிடைக்கும் என்பது இவர் மூலம் பலருக்கும் விளங்கி விட்டது என்று உரைக்கும் படி சில ரசிகர்கள் பேசி வருவது தற்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது.

LATEST News

Trending News