குளிக்க 12 ஆயிரம் லிட்டர் தண்ணி கேட்ட ஹீரோயின்!! நடிக்காமல் இடத்தை காலி செய்த நடிகை
இயக்குனர் எழில் இயக்கத்தில் 2006ல் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா, மேக்னா நாய்டு உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ஜாம்பவான். ஓரளவிற்கு வரவேற்பு பெற்ற இப்படத்தை தொடர்ந்து நடிகை மீரா சோப்ரா, அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்தார். அதன்பின், 9 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இந்தி பக்கம் சென்றுவிட்டார்.
கடந்த மார்ச் மாதம் ரக்ஷித் கெஜ்ரிவால் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். நடிகை மீரா சோப்ரா பற்றிய ஒரு தகவலை இயக்குனர் எழில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஜாம்பவான் படத்தின் போது மீரா சோப்ராவுக்கும் எனக்கும் பிரச்சனை வர காரணம் என்ன என்று கூறியிருக்கிறார் இயக்குனர் எழில்.
படத்தின் ஷூட்டிங் குற்றாலத்தில் எடுத்திருந்தோம். ஒருநாள் குற்றாலம் அருவி கீழே 12 ஆயிரம் லிட்டர் டாங்க் இருந்தது. அதில் தண்ணீரை நிரப்பி, அதில் அவர் குளிக்கும் காட்சி எடுக்க வேண்டும். ஆனால், இந்த தண்ணில எல்லாம் குளிக்கமாட்டேன் என்று மினரல் வாட்டர் நிரப்ப சொன்னாங்க.
தயாரிப்பாளரிடம் சொல்லியும் முடியாது என்று கூறிவிட்டோம். உடனே நடிக்கமாட்டேன் என்று கோவித்துக்கொண்டு ஷூட்டிங்கை விட்டு சென்றுவிட்டார்கள் என்று எழில் காமெடியாக கூறியிருக்கிறார்.